அண்ணா சாலை கட்டிடம் இடிந்து பெண் பலியான விவகாரம்- ஒப்பந்ததாரர் கைது - உரிமையாளர் தலைமறைவு

x

சென்னை அண்ணாசாலையில் பழைய கட்டடம் இடிந்து இளம்பெண் உயிரிழந்த விவகாரத்தில் 4-வது நபராக கட்டட ஒப்பந்ததாரரை காவல்துறை கைது செய்துள்ளது.

தற்போது தலைமறைவாக இருந்து வரும் கட்டிடத்தின் உரிமையாளர் சையது அலி பாத்திமா, பொறியாளர் ஷேக்பாய் ஆகியோரை தேடி வருகின்றனர்.

ஏற்கனவே, இந்த வழக்கில் ஜே.சி.பி உரிமையாளர் ஞானசேகரன், ஜேசிபி ஓட்டுனர் பாலாஜி, கட்டட உரிமையாளரின் உறவினர் ஜாகீர் உசேன் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்