நிலப்பிரச்சினையில் ஏற்பட்ட முன்விரோதம்... வீட்டிற்குள் புகுந்து சரமாரி கத்திக்குத்து - துபாயில் இருந்து வந்த நபர் வெறிச்செயல்

x

வேப்பூர் அருகே, துபாயில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பிய நபர், முன்விரோதம் காரணமாக பக்கத்து வீட்டைச் சேர்ந்தவரை, கத்தியால் குத்திக் கொலை முயற்சி செய்த சம்பவம் நடந்துள்ளது. கடலூர் மாவட்டம் பாசார் கிராமத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவருக்கும், பக்கத்து வீட்டைச் சேர்ந்த நல்லத்தம்பி என்பவருக்கும் இடையே, இடப் பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், துபாயில் இருந்து சொந்த ஊருக்கு வந்த நல்லதம்பி, கையில் கத்தியுடன் நேராக பன்னீர்செல்வம் வீட்டிற்கு அவரை தாக்க முயன்றுள்ளார். இதில் அவரது காது மற்றும் கையில் வெட்டுபட்டது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்