தேர்தல் தோல்வியால் ஆத்திரம்... "தோற்கடித்த சமூகத்திற்கு தக்க பாடம் புகட்டுவேன்" - பா.ஜ.க வேட்பாளரின் பேச்சால் சர்ச்சை

x

கர்நாடக மாநிலம் ஹாசன் நகர் தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினராக இருந்த பிரீத்தம் கவுடா, சட்டமன்றத் தேர்தலில், மதசார்பற்ற ஜனதா தள வேட்பாளர் ஸ்வரூப் பிரகாஷிடம் 7,854 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இத்தொகுதியில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் எண்ணிக்கையில் இஸ்லாமியர்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் இஸ்லாமியர்கள் பா.ஜ.க.வுக்கு வாக்கு செலுத்தவில்லை என்பதும் தெரியவந்தது. இந்நிலையில், தனது வீட்டு மாடியில் நின்றபடி பேசிய பா.ஜ.க. வேட்பாளர் பிரீத்தம் கவுடா, தன்னை தோற்கடித்த குறிப்பிட்ட சமூகத்திற்கு தக்க பாடம் புகட்டப்போவதாகத் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்