மது அருந்த பணம் தராததால் ஆத்திரம்... வியாபாரியை கல்லால் தாக்கிய இளைஞர்கள் - சென்னையில் அதிர்ச்சி

x

சென்னை வண்ணாரப்பேட்டை போஜராஜன் நகர் பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் பழ விற்பனையில் ஈடுபட்டு வருகிறார். ரயில்வே கேட் அருகே வியாபாரம் செய்தபோது, அங்கு வந்த வினோத்குமார் மற்றும் பாபுலால், தன்னிடம் மது அருந்த பணம் கேட்டபோது மறுத்துள்ளார். இதனால் பழிவாங்கும் நோக்கில், தன்னை ரயில்வே தண்டவாள ஓரத்திற்கு இருவரும் அழைத்துச் சென்று, தனது தலையில் கல்லால் கடுமையாக தாக்கியதாக தெரிவித்தார். தான் கூச்சலிட்டதால், அருகில் இருந்தவர்கள் தன்னை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாக சுரேஷ்குமார் தெரிவித்தார். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வினோத்குமார் மற்றும் பாபுலாலை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்