வங்கி கணக்கில் இருந்து மாயமான பணம்... சிக்கிய ஒரு லட்சம் வாடிக்கையாளர்களின் கை விரல் ரேகை - விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள்

x

ஆந்திர மாநிலம் சின்ன சவுக் பகுதியை சேர்ந்த ராஜசேகர் ரெட்டி என்பவருடைய வங்கி கணக்கில் இருந்து, திடீரென்று 89 ஆயிரத்து 550 ரூபாய் மாயமானது. இது குறித்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், உத்திர பிரதேசத்தைச் சேர்ந்த சேஷ நாத் சர்மா என்பவனை கைது செய்தனர்.

அப்போது, அவரிடமிருந்து ஒரு லட்சம் வாடிக்கையாளர்களின் கை விரல் ரேகை பதிவுகளுடன் கூடிய ஹார்ட் டிஸ்க், ஸ்கேனர், மொபைல் போன் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்.

இதுவரை, 440 பேரின் வங்கி கணக்குகளில் இருந்து கோடிக்கணக்கான ரூபாயை அவர் சுருட்டியுள்ளதாகவும் கடப்பா எஸ்பி அன்புராஜன் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்