"மாநிலத்தை இரண்டாக உடைத்து... அரசியல் நடத்த துடிக்கிறார்" - அமைச்சர் ரோஜா ஆவேசம்...

x

ஆந்திர மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா திருப்பதி மலையில் ஏழுமலையானை வழிபட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

தெலுங்கு தேசம் கட்சி ஆந்திராவில் நடத்திய இரண்டு நிகழ்ச்சிகளில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்ததற்கு, அக்கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது மகன் லோகேஷ் ஆகியோர் முழு பொறுப்பு என தெரிவித்துள்ளார்.

இருவர் மீதும், கிரிமினல் வழக்கு தொடர வேண்டும் என்றும், ஆந்திராவை இரண்டாக உடைத்த சந்திரசேகர் ராவ் இப்போது தன்னுடைய கட்சியை தேசிய கட்சியாக அறிவித்து ஆந்திராவில் அரசியல் நடத்த துடித்து கொண்டிருப்பதாக ரோஜா கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்