சென்னை கொடுங்கையூரில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ராஜேசேகர் உயிரிழந்த விவகாரத்தில், ஆய்வாளர் உட்பட 5 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக, வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அன்பு தெரிவித்துள்ளார். இனி இது போன்று நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.