"ஆற்றல் வாய்ந்த அமைச்சர் உதயநிதி" - அமைச்சர் அன்பில் மகேஷ் புகழாரம்

x

சென்னை எழும்பூர் ராதாகிருஷ்ணன் விளையாட்டு மைதானத்தில், பள்ளி, கல்லூரிகளுக்கு இடையேயான கைப்பந்து போட்டிகள் நடைபெற்றன.

ஆண்கள், பெண்கள் என இரு பிரிவுகளாக நடைபெற்ற போட்டிகளில், தமிழகம் முழுவதும் இருந்து 65 பள்ளிகள், 45 கல்லூரிகளை சேர்ந்த அணிகள் பங்கேற்றன.

போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பரிசுகளையும், கோப்பையையும் வழங்கினார்.

விழாவில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, விளையாட்டுத் துறை சார்ந்த கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றக் கூடியவராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இருக்கிறார் என்று கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்