டிபிஐ வளாகத்தில் அன்பழகன் சிலை...மூக்கு கண்ணாடி நிறத்தை மாற்ற சொன்ன முதல்வர் | MK Stalin | Anbalagan

x

சென்னை டிபிஐ வளாகத்தில் நிறுவ உள்ள பேராசிரியர் அன்பழகனின் வெண்கல சிலைக்காக, திருவள்ளூரில் வடிவமைத்துள்ள களிமண் மாதிரியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். திமுகவின் முன்னாள் பொதுச்செயலாளரான அன்பழகனிற்கு டிபிஐ வளாகத்தில் வெண்கல சிலை நிறுவப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதற்காக திருவள்ளூர் மாவட்டம் புதுப்பேடு பகுதியில் 8.5 அடி உயர களிமண் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. அதை பார்வையிட்ட முதலமைச்சர், சிலை வடிவமைப்பு குறித்து சிற்பிகள் தீனதயாளன் மற்றும் கார்த்திகேயனிடம் ஆலோசித்தார். மேலும், அன்பழகன் சிலையில் மூக்கு கண்ணாடியை பழுப்பு நிறத்தில் அமைக்கவும் அறிவுறுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்