கட்டுக்கடங்காத கூட்டம்...ரயில் நிலையத்தை திணறடித்த இளைஞர்கள் - அதிர்ச்சி வீடியோ காட்சிகள்

x

கட்டுக்கடங்காத கூட்டம்...ரயில் நிலையத்தை திணறடித்த இளைஞர்கள் - அதிர்ச்சி வீடியோ காட்சிகள்

உத்தரபிரதேசத்தில் அரசு பணிக்கு தேர்வு எழுத சென்ற இளைஞர்கள், போதிய போக்குவரத்து வசதி இல்லாததால், ரயில் ஜன்னல்களில் அமர்ந்து பயணம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசத்தில் அரசு பணிகளுக்கான பெட் தேர்வின் குரூப் பி மற்றும் குரூப் சி பிரிவின் முதல்நிலை தேர்வுகள் இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்வை லட்சக்கணக்கான இளைஞர்கள் எழுதி வருகின்றனர். நேற்று தேர்வு செய்த சென்ற இளைஞர்கள், காலை தேர்வு முடிந்ததும் மாலையில் சீதாபூர் ரயில் நிலையத்தில் குவிந்தனர். அங்கு போதிய ரயில்சேவை இல்லாததால், ஒரே ரயிலில் ஏராளமானோர் ஒருவர் மீது ஒருவர் மோதிக் கொண்டு பயணித்தனர். சிலர் ரயிலின் ஜன்னல் கம்பிகளில் அமர்ந்த படி சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசு, பேருந்து மற்றும் ரயில் சேவைக்கு ஏற்பாடு செய்யவில்லை என்றும், ரயில் புறப்படும் நேரம் குறித்த சரியான அறிவிப்பு இல்லை என்றும் இளைஞர்கள் குற்றம்சாட்டினர்.


Next Story

மேலும் செய்திகள்