இனிப்பு வியாபாரம் செய்யும் முதியவர்- பழைய திரைப்பட பாடல்களை ஒலித்து உற்சாகம்

x

தென்காசி அருகே முதியவர் ஒருவர் பழைய திரைப்பட பாடல்களை ஒலித்தவாறு உற்சாகமாக இனிப்பு வியாபாரம் செய்து வருகிறார். நரையப்பபுரம் கிராமத்தை சேர்ந்த முதியவர் ராஜலிங்கம். சுக்கு மிட்டாய் மற்றும் சோன்பப்படி இனிப்புகளை தயார் செய்யும் இவர், கீழப்பாவூர் ஒன்றிய பகுதிகளில் வியாபாரம் செய்து வருகிறார். 41 ஆண்டுகளாக தள்ளுவண்டியில் வியாபாரம் செய்து வரும் இவர், நாள்தோறும் எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி கணேசன் உள்ளிட்டோரின் பாடல்களை வாகனத்தில் ஒலிக்கச் செய்து, ​அப்பகுதியில் பழைய நினைவுகளை பகிர்ந்து வருகிறார்.


Next Story

மேலும் செய்திகள்