100 அடி மரத்தில் ஏறி கீழே இறங்க முடியாமல் தவித்த முதியோர்... போராடி மீட்ட தீயணைப்பு வீரர்கள்

x

கேரள மாநிலம் இடுக்கி அருகே, மரக்கிளையை வெட்டுவதற்காக 100 அடி மரத்தில் ஏறிய தொழிலாளி, கீழே இறங்க முடியாமல் தவித்த நிலையில், தீயணைப்புத் துறையினர் மீட்டனர். சாலங்கோடு பகுதியில் உள்ள மரத்தின் கிளைகளை வெட்டும் பணியில், ஷாஜஹான் என்ற தொழிலாளி ஈடுபட்டார். 100 அடி உயரம் கொண்ட மரத்தில் ஏறி கிளைகளை வெட்டிய பிறகு, கீழே இறங்க முடியாமல் தவித்ததாக தெரிகிறது. உடனடியாக வந்த தீயணைப்புத் துறையினர், ஒரு மணி நேரம் போராடி, ஷாஜஹானை மீட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்