இருபது வருடம் காத்திருந்த பழைய பகை...தந்தையை கொன்றவரை பழிதீர்த்த மகன்கள்...

x

சென்னை - மயிலாப்பூர்

கருவிலிருக்கும் போது கொல்லப்பட்ட தந்தை...

பிறந்து வளர்ந்து ரவுடியை கொன்ற மகன்கள்...

இருபது வருடம் காத்திருந்த பழைய பகை...

தந்தையை கொன்றவரை பழிதீர்த்த மகன்கள்...

பிரபல ரவுடி ஓட ஓட வெட்டி கொலை...

சினிமா படப் பாணியில் பழிக்கு பழி..

அப்பாவை கொன்ன ரவுடிய பையன் வளர்ந்து பெரிய ஆளா ஆனதுக்கு அப்புறம் கொலை பண்ணுற கதைகளை சினிமாவுல நிறைய பாத்திருப்போம். தேய்வழக்காகி போன அந்த கதை கருவ இப்ப சினிமாகாரங்களே எடுக்குறதில்லை. ஆனா நிஜத்துல அந்த சம்பவம் இன்னும் தொடர்ந்துகிட்டு தான் இருக்குனு உணர்த்தியிருக்கு மயிலாப்பூர்ல நடந்த ஒரு கொடூர கொலை.

இரவை மிரள வைத்த ஒற்றை கிழவியின் ஒப்பாரி சத்தம்.

தரையிலும் சுவற்றிலும் பீறிட்டு உறைந்து கிடந்த குருதி ...


மழையை பொருட்படுத்தாமல் குறுகிய சந்தில் விசாரனையை விரித்த காவல்துறை...

இப்படித்தான் அன்று பல்லக்கு மாநகர் பகுதியே பரபரப்புடன் பற்றி எரிந்து கொண்டிருந்தது.

ஏரியாவையே கதிகலங்க வைத்த ஒரு ரவுடியின் கொடூர கொலை தான் இத்தனை பரபரப்புகளுக்குமான காரணம்.

கொல்லப்ப்படவர் சென்னை மயிலாப்பூரில் உள்ள பல்லக்குமாநகர் பகுதியை சேர்ந்த ரவுடி ராஜா என்னும் டொக்கன் ராஜா. கொலை, ஆட்கடத்தல் என இவர் மீது 25 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் பிரபல ரவுடி சிடிமணியின் கூட்டாளி. தற்போது பாஜகவிலும் முக்கிய பொருப்பில் இருக்கிறார்.

தொடர்ந்து பல வருடங்களாக போலீசாரால் தேடப்பட்டு வந்த டொக்கன் ராஜா கடந்த 5 வருடங்களுக்கு முன்பு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

ப்ரீத்.... நியூஸ் 18 விஷுவலை பயன்படுத்திக்கொள்ளவும்.......

அதன்பிறகு ஜாமினில் வெளியே வந்தவர் ரவுடிசத்தை கையில் எடுத்து யாரும் தொடமுடியாத பெரும்புள்ளியாக மாறி இருக்கிறார்.

இந்நிலையில் தான் சம்பவம் நடந்த அன்று இரவு, நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்திருக்கிறார் டொக்கன் ராஜா. அப்போது இருசக்கர வாகனத்தில் அரிவாள் கத்தியுடன் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் ராஜாவுக்கு சுத்து போட்டு சோலியை முடித்திருக்கிறது.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், முன்விரோதத்தில் டொக்கன்ராஜா கொலைசெய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரனை நடத்தி இருக்கிறார்கள்.

அப்போது தான் திண்டிவனம் நீதிமன்றத்தில் நரேஷ் குமார், மனோஜ்குமார், ராஜேஷ் உள்ளிட்ட நான்கு பேர் குற்றத்தை ஒப்புக்கொண்டு சரணடைந்திருக்கிறார்கள்.

அவர்களிடம் நடத்திய விசாரனையில் தான், 20 ஆண்டுகளாக பிறந்து வளர்ந்த ஒரு குரோதம் தற்போது ராஜாவின் குலையை அறுத்திருப்பது தெரியவந்திருக்கிறது.

தமிழ் சினிமாவின் முக்கால்வாசி திரைப்படங்களில் எல்லாம் தந்தையை கொன்ற எதிரியை மகன் வளர்ந்து வந்து கொலை செய்வது தான் கருவாக இருக்கும்.

அப்படித்தான் கடந்த 2003 ஆம் ஆண்டு ரவுடி துரைகண்ணுவை டொக்கன்ராஜாவின் ஆட்கள் வெட்டி கொலை செய்தனர். அப்போது தவறுதலாக எந்த பாவமும் அறியாத கறிக்கடை கதிரவன் வெட்டி கொல்லப்பட்டார்.

அப்போது கதிரவனின் ஒன்றரை வயதான நரேஷ்குமார் என்ற மகனும் நிறைமாத கர்ப்பிணியான மனைவியும் நிற்கதியாய் நின்றனர். கணவன் இறந்த பிறகு பிழைக்க வழியில்லாததால், கண்ணகி நகர் பகுதிக்கு குடிபெயர்ந்திருக்கிறார் கதிரவனின் மனைவி.

கருவில் இருந்த குழந்தையும் பிறந்திருக்கிறது. அதற்கு மகேஷ்குமார் என்று பெயரிட்டு வளர்த்து வந்திருக்கிறார் கதிரவனின் மனைவி. குழந்தைகள் தந்தை எங்கே என்று கேட்டபோதெல்லாம்,"இவன் தான் உன் தந்தையை வெட்டிக்கொன்றான்" என டொக்கன் ராஜாவின் பெயரை சொல்லி வன்மத்தையும் சேர்த்தே வளர்த்திருக்கிறார்.

நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக வன்மத்தோடு வளர்ந்த பிள்ளைகள் இருவரும் பள்ளி, கல்லூரி படிப்பினை முடித்து கையில் எடுத்த முதல் வேலை டொக்கன் ராஜாவை கருவறுப்பது தான்.

அண்ணன் தம்பி இருவரும் கூட்டாளிகளை சேர்த்துக்கொண்டு பட்டாகத்தியுடன் பக்காவாக ப்ளான் போட்டு களத்தில் இறங்கி உள்ளனர்.

சம்பவம் நடந்த அன்று ஏரியாவுக்குள் தவுலத்தாக நின்று கொண்டிருந்த ராஜாவுக்கு செக் வைத்து வெட்டி சரித்தது விசாரனையில் தெரியவந்திருக்கிறது.

விசாரனை முடிவில் நரேஷ், சபரி நாதன், மனோஷ் , ராஜேஷ், கார்த்திக் உட்பட ஐந்து பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்