"யோ பஸ்சை நிறுத்து யா!" நடுரோட்டில் அரசு பேருந்தை மறித்த யானை... வைரலாகும் வீடியோ

உடுமலை அருகே உள்ள தமிழக கேரளா எல்லை பகுதியான மறையூரில், பேருந்தை காட்டு யானை மறித்த‌தால் பயணிகள் அச்சமடைந்தனர். உடுமலை - மூணாறு சாலையில் கேரள அரசு பேருந்து சென்று கொண்டிருந்த போது, கேரளாவின் மறையூர் பகுதியில் காட்டு யானை வழிமறித்த‌து. படையப்பா என்று அழைக்கப்படும் அந்த யானை, பேருந்தின் கண்ணாடியை முட்டி பேருந்தை தள்ளியதால் பயணிகள் அச்சமடைந்தனர். அதனை பயணி ஒருவர் எடுத்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com