இரு கரையும் தண்ணீர் தொட்டு செல்லும் வைகை ஆற்றின் கழுகு பார்வை காட்சி

x

மதுரை வைகை ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால், பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வைகை அணை முழுக் கொள்ளளவை எட்டியதால், அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

வராக நதி, மஞ்சளாறு, மருதா நதி உள்ளிட்ட துணை ஆறுகளின் நீரும் வைகை ஆற்றில் சேர்ந்து 10 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் சென்றுக் கொண்டிருக்கிறது.

வைகை ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வைகை ஆற்றின் இரு கரையும் தண்ணீர் தொட்டு செல்வதை கழுகு பார்வையில் எடுத்த வீடியோ வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்