கணவனின் மகனை கொன்ற கள்ளக்காதலி... கட்டில் காட்சியை பார்த்ததால் நடந்த பயங்கரம்

x

ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காட்சியளிக்கும் இந்த பகுதியில்தான் ஒரு வருடத்திற்கு முன்பு படுபயங்கர சம்பவம் நடந்திருக்கிறது.

பிளாஸ்டிக் பாட்டில்கள் மிதப்பதுபோல் ஒன்பது வயது சிறுவன் ஒருவனும் இதே கிணற்றில் சடலமாக மிதந்துள்ளார்.

சடலத்தை மீட்டு விசாரணையை தொடங்கிய போலீசார் சிறுவன் தவறி விழுந்து மரணமடைந்ததாகதான் முதலில் நினைத்திருக்கிறார்கள்.

ஆனால், சிறுவனின் உடற்கூறு ஆய்வு அறிக்கை நடந்திருப்பது திட்டமிட்ட படுகொலை என்பதை உறுதிச்செய்திருக்கிறது.

பல கோணங்களில் பலபேரிடம் போலீசார் விசாரணை நடத்தியிருக்கிறார்கள்.

ஆனால், சிறுவனை கொலைச் செய்த குற்றவாளி மட்டும் சிக்கவே இல்லை…

அப்போதுதான் கடைசியாக குடும்பத்தினரே கொலைச் செய்திருக்கலாம் என்று யூகித்த காவல்துறையினர் சிறுவனின் குடும்பத்தினரை மறைமுகமாக கவனித்து வந்திருக்கிறார்கள்.

அதில் சிறுவனுடைய தந்தையின் கள்ளக்காதலி கொலையாளியாக தற்போது சிக்கியிருக்கிறார்.

நடந்த கொலையின் முழு பின்னணியை தெரிந்துகொள்ள கால சக்கரத்தை சுழற்றி ஒரு வருடத்திற்கு முன்பு பயணித்தோம்…

விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம் பண்ணை கிராமத்தில் வசித்துவந்தவர் கோபால். திருநெல்வேலியில் பழைய இரும்பு பொருட்களை வியாபாரம் செய்யும் கடையில் வேலைப்பார்த்து வந்துள்ளார்.

அப்போது காளீஸ்வரி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். கணவன் மனைவி இருவரும் காளீஸ்வரியின் சொந்த ஊரான ஏழாயிரம் பண்ணை கிராமத்திற்கு குடியேறியிருக்கிறார்கள்.

தம்பதிக்கு பரந்தாமன் என்ற மகனும், ஒரு மகளும் இருந்துள்ளனர்.

இந்த சூழலில்தான் காளீஸ்வரி கணவருக்கு தெரியாமல் வேறு ஆணுடன் கள்ளத்தொடர்பில் இருந்திருக்கிறார்.

கள்ளக்காதலர்கள் இருவரும் அடிக்கடி வீட்டில் உல்லாசமாக இருந்திருக்கிறார்கள். அப்படி ஒருநாள் காளீஸ்வரியும், கள்ளக்காதலனோடு தனிமையில் இருந்ததை அவரது மகன் பரந்தாமன் பார்த்திருக்கிறார்.

இதனால், காலீஸ்வரிக்கு குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கள்ளக்காதல் விவகாரத்தை கணவரிடம் மகன் சொல்லிவிடுவார் என்ற பயத்தில் இரண்டு வருடங்களுக்கு முன்பு காலீஸ்வரி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

மனைவி இறந்த ஆறு மாதத்திலேயே கோபாலுக்கு அதே பகுதியை சேர்ந்த கவுசல்யா என்ற பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. கெளசல்யாவை வீட்டிற்கு அழைத்து வந்து லிவ்விங் டூ கெதரில் வாழந்து வந்திருக்கிறார் கோபால்.

ஆனால், கோபாலுடன் வாழ்க்கையை தொடங்கிய கெளசல்யா படுக்கையை சேது காமேஷ் என்ற ஆண் நண்பருடன் பகிர்ந்திருக்கிறார்.

கோபால் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து சேது காமேஷை வீட்டிற்கு அழைத்து வந்து உல்லாசமாக இருந்துள்ளார். சித்தியின் லீலைகளும் சிறுவன் பரந்தாமன் கண்ணில் சிக்கி இருக்கிறது.

இது கவுசல்யாவிற்கு பயத்தை ஏற்படுத்தவே, கோபாலிடம் சிறுவன் போட்டுக்கொடுப்பதற்கு முன்பு பரந்தாமனை தீர்த்துக்கட்ட முடிவுச் செய்திருக்கிறார்.

அதற்காக கள்ளக்காதலனுடன் சேர்ந்து பரந்தாமனின் கழுத்தை நெரித்து கொலைச் செய்திருக்கிறார் கவுசல்யா.

பிறகு கொலையிலிருந்து தப்பிக்க சிறுவனின் சடலத்தை கிணற்றில் வீசிவிட்டு , எதுவும் தெரியாததுபோல் காவல் நிலையத்தில் பரந்தாமன் காணவில்லை என்று புகார் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், கள்ளக்காதலியின் சுயரூபம் கோபாலுக்கு தெரியாமல் போயிருக்கிறது.

பரந்தாமனின் கொலை சம்பவத்தை தொடர்ந்து கோபாலுடன் சென்னையில் தலைமறைவாகி இருக்கிறார் கவுசல்யா.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார் ஒருவருடமாக நோட்டமிட்டு கவுசல்யாவை கைதுச் செய்திருக்கிறார்கள். மேலும் தலைமறைவாக இருக்கும் கள்ளக்காதலனை தொடர்ந்து வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்