திடீரென வெளியே வந்த 8 அடி நீள வெள்ளை பாம்பு... ஆச்சரியத்தில் மூழ்கிய மக்கள்

x

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே நாய்க்கனேயில் சாலையை கடந்த சுமார் 8 அடி நீளமுள்ள அரிய வெள்ளை நிற சாரைப்பாம்பை மக்கள் ஆச்சரியத்துடன் வேடிக்கை பார்த்தனர். அப்பகுதியில் தார் சாலை சீரமைக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், நாய்க்கனேரியில் இருந்த இந்த வெள்ளை சாரைப்பாம்பு திடீரென சாலையைக் கடந்தது. 8 அடி நீள அந்த சாரைப் பாம்பு சாலையைக் கடக்கும் வரை வாகன ஓட்டிகள் பொறுமை காத்தனர்... அவ்வழியே வேலைக்கு சென்றவர்களும் பொறுமையாக பாம்பை வேடிக்கை பார்த்து விட்டு பிறகு பணிக்கு சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்