அட பாவமே.. கிரிக்கெட்டில் ஏற்பட்ட தகராறு - இளைஞருக்கு சரமாரி அரிவாள் வெட்டு - ஆம்பூரில் அதிர்ச்சி

x

ஆம்பூர் அருகே கிரிக்கெட் விளையாடுவதில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சான்றோர்குப்பத்தை சேர்ந்தவர் அஜய்குமார்.

இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சில இளைஞர்களுக்கும் கிரிக்கெட் விளையாடுவதில் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த அஜய்குமாரை சில இளைஞர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தில் மீட்கப்பட்ட அஜய்குமார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வரும் நிலையில், தலைமறைவாகியுள்ள இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்