முந்த முயன்ற ஆம்புலன்ஸ்....நொடியில் நடந்த பயங்கரம்

x

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே நோயாளியை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் அரசு பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் படுகாயமடைந்தனர்.

சிவகிரியில் இருந்து நோயாளி ஒருவரை ஏற்றிக் கொண்டு, மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு, ஆம்புலன்ஸ் ஒன்று சென்றுக் கொண்டிருந்தது.

அப்போது, முன்னால் சென்ற அரசு பேருந்தை ஆம்புலன்ஸ் முந்த முயன்ற போது, பேருந்தின் பின்பக்கத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 6 பேர் படுகாயம் அடைந்த நிலையில், அவர்களை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்