அவசரத்திற்கு வராத ஆம்புலன்ஸ் - ஆண்டவனாக மாறிய ஆட்டோ டிரைவர்

x

கோவை கெம்மநாயக்கன் பாளையத்தில் வசித்து வரும் மணிகண்டன் என்பவரின் மனைவி மணிமேகலை, நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.

மணிமேகலைக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதால், அன்னூர் அரசு மருத்துவமனைக்குச் செல்வதற்கு ஆம்புலன்ஸுக்கு போன் செய்தனர்.

ஆம்புலன்ஸ் வாகனம் வர தாமதம் ஏற்பட்ட நிலையில், வலி அதிகரித்ததால் ஆட்டோவில் ஏறி மருத்துவமனைக்கு புறப்பட்டனர்.

மருத்துவமனை செல்லும் வழியிலேயே மணிமேகலைக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

இதையடுத்து அன்னூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட தாயும் குழந்தையும், அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்