ஆம்புலன்ஸை எடுத்து சென்ற மனநலம் பாதிக்கப்பட்ட நபர் - துரத்திப் பிடித்த ஓட்டுநர்... பரபரப்பு காட்சிகள்

x


மதுராந்தகம் அருகே ஆம்புலன்ஸை எடுத்து சென்ற மனநலம் பாதிக்கப்பட்ட நபரை, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் துரத்திச் சென்று பிடித்தார்.

கருங்குழி என்ற இடத்தில், டயரை பரிசோதிக்க ஆம்புலன்ஸ் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்தது.

அப்போது, சைக்கிளில் வந்து கொண்டிருந்த நபர், திடீரென ஆம்புலன்ஸை எடுத்து ஓட்டி சென்றார்.

இதையடுத்து, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அரசு பேருந்தில் சென்று ஆம்புலன்ஸை எடுத்து சென்ற நபரை பிடித்துள்ளார்.

அந்நபரை தாக்கிய பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையில், அவரது பெயர் விக்கி என்பதும் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரிய வந்தது.


Next Story

மேலும் செய்திகள்