நோயாளியுடன் சென்ற ஆம்புலன்ஸ் குப்புற கவிழ்ந்து கோர விபத்து-நோயாளியுடன் சென்ற மகளுக்கு நேர்ந்த சோகம்

x

தேனியில் நோயாளியை மருத்துவமனைக்கு ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

கம்பம் பகுதியைச் சேர்ந்த மணி என்பவர் உடல் நலக்குறைவு காரணமாக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்த ஆம்புலன்சில் மணிக்கு உதவியாக அவரது 2 மகள்கள் ஜெயா மற்றும் விஜயா ஆகியோர் உடன் சென்றனர்.

இந்நிலையில், திடீரென நிலை தடுமாறி தலை குப்புற ஆம்புலன்ஸ் கவிழ்ந்ததில், மணியின் மகள் ஜெயா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்


Next Story

மேலும் செய்திகள்