ஆம்புலன்சும் காரும் நேராக மோதி பயங்கர விபத்து - வெளியான பயங்கர சிசிடிவி காட்சி

x

கேரள மாநிலம் திருச்சூரில், காரும், ஆம்புலன்ஸ் வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில், ஒருவர் உயிரிழந்தார். திருச்சூரில், காரும், நோயாளியை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில், காரை ஓட்டி வந்த ஜித்து என்பவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், அவரது மனைவி, மாமனார், மூன்று வயது குழந்தை ஆகியோர் படுகாயமடைந்தனர். மேலும், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் நோயாளி ஆகியோர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்