தாசில்தாரின் முத்திரையை வைத்து முதியவர் செய்த வேலை - அம்பத்தூரில் சிக்கிய முக்கிய ஆவணங்கள்

x

அம்பத்தூரில் தாசில்தாரின் முத்திரையை முறைகேடாக பயன்படுத்திய முதியவர் உள்பட இரண்டு பேரை, குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை அடுத்த அம்பத்தூர் தாலுகாவில், தாசில்தாராக இருப்பவர் ராஜசேகர்.

இவர், தனது முத்திரையை சிலர் முறைகேடாக பயன்படுத்துவதாக போலீசில் புகாரளித்தார்.

இதன் அடிப்படையில், 85 வயதான வின்சென்ட் மற்றும் பினு ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

மேலும், அவர்களிடமிருந்து வட்டாட்சியர், வருவாய் கோட்டாட்சியர் போன்ற அரசு அதிகாரிகளின் 6 போலி முத்திரைகள் மற்றும் ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்