திருச்செந்தூர் கோயிலில் அசர வைத்த உண்டியல் காணிக்கை

x

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஜூன் மாதத்திற்கான இரண்டாவது உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் ஒரு கோடியே 81 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் பணம் காணிக்கையாக கிடைத்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுதவிர ஒன்றரை கிலோ தங்கம், 32 கிலோ வெள்ளி, 523 வெளிநாட்டு பணமும் காணிக்கையாக பெறப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்