அமர்நாத் குகை புனித யாத்திரை ஒரே நாளில் 18 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்

x

அமர்நாத் குகையில் உள்ள பனி லிங்கத்தை இதுவரை 67 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 1ம் தேதி அமர்நாத் குகைக்கு புனித யாத்திரை தொடங்கியது. நேற்று மட்டும், 18 ஆயிரத்து 354 அமர்நாத் குகைக்கு சென்றனர். கடந்த 1ம் தேதி முதல் நேற்று வரை 67 ஆயிரத்து 566 பக்தர்கள் அமர்நாத் குகையில் பனிலிங்கத்தை தரிசனம் செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வரும் ஆகஸ்ட் 31ம் தேதி வரை அமர்நாத் யாத்திரை நடைபெறும் நிலையில், பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் மருத்துவ உதவிகள் அனைத்திற்கும் உரிய வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்