ஏழைகளுக்காக சொந்த செலவில் அமரர் ஊர்தி..மனித நேயத்தால் இதயம் தொடும் மனிதர்

x

ஆதரவற்ற உடல்களை அடக்கம் செய்வதில் ஆத்ம திருப்தி அடைந்து வரும் தஞ்சை பட்டுக்கோட்டையை சேர்ந்த பாலமுருகன் குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த பிறகும் சொந்தம் கொண்டாட வராததால் அனாதையாக்கப்படும் சடலங்கள் பரிதாபத்தின் உச்சம்..!

வெவ்வேறு வயிற்றில் பிறந்திருந்தாலும்...சாதி - மதத்திற்கு அப்பாற்பட்டு பழகுபவர்களுக்கு மத்தியில், ஒரு படி மேலே சென்று... கைவிடப்பட்ட சடலங்களை எல்லாம் உறவாக்கி கொள்ளும் உன்னத உள்ளம் படைத்தவர்கள் தான், இந்த பாலமுருகன்

பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வரும் இவர்,

கடந்த 4 ஆண்டுகளாக இதுவரை 66 ஆதரவற்ற சடலங்களை அடக்கம் செய்துள்ளார்.

இந்நிலையில், சமீப காலமாக அடக்கம் செய்வதற்கான செலவுக்கு கூட காசு இன்றி தவிக்கும் மக்களை மனதில் கொண்டு இவர் அறிமுகம் செய்திருப்பது தான், இந்த அமரர் ஊர்தி.

தனது சொந்த முயற்சியில் மூன்று லட்ச ரூபாய்

செலவழித்து இவர் அறிமுகம் செய்துள்ள வாகனத்தை அணுகி, இனி ஏழைகளும் எளிதில் பயன் பெற்றுக்கொள்ளலாம்.

இப்படி மனித நேயத்தை கடந்து ஆன்ம நேயம் கொண்ட மனிதர்களாக வலம் வரும் இவரின் சேவை தொடர நாமும் வாழ்த்துவோம்.


Next Story

மேலும் செய்திகள்