"ராஷ்மிகாவைவிட நான் பெரிய ஆளா..? நோ நெவர்.." தடாலடியாக பம்மிய ஐஸ்வர்யா ராஜேஷ்

x

ராஷ்மிகா மந்தனா குறித்து கூறிய கருத்து சர்ச்சையான நிலையில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் விளக்கமளித்துள்ளார்.

புஷ்பா படத்தில் ராஷ்மிகா மந்தனாவிற்கு பதிலாக தான் நன்றாக நடித்திருப்பேன் என ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியதாக செய்திகள் வெளியாகி சர்ச்சையானது. இதற்கு விளக்கமளித்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ், எந்த கேரக்டரில் நடிக்க விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு புஷ்பா படத்தில் ஸ்ரீவள்ளி கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று தான் பதிலளித்ததாகவும், துரதிருஷ்டவசமாக தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டதாகவும், ராஷ்மிகாவின் கடின உழைப்பை தான் ஒருபோதும் குறை கூறவில்லை எனவும் ஐஸ்வர்யா ராஜேஷ் குறிப்பிட்டுள்ளார். ராஷ்மிகா மீது ஆழ்ந்த அபிமானம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்