காதல் திருமணம் செய்த மாற்று சமூகத்தினர்..ஆத்திரத்தில் மணமகனின் நண்பனுக்கு...மயிலாடுதுறையில் அதிர்ச்சி சம்பவம்

x

மயிலாடுதுறையில் ஜெயின் சமூகத்தை சேர்ந்த சோனல்குமாரி என்பவர், மாற்று சமூகத்தை சேர்ந்த பாலச்சந்தர் என்பவரை காதலித்து வந்த நிலையில், வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டார். இந்த சம்பவத்தில் பெண்ணின் வீட்டார் அதிர்ச்சி அடைந்த நிலையில், பாலச்சந்தரின் குடும்பத்தினருக்கு நெருக்கமாக இருந்த ராஜேஷ் என்பவர், கடந்த 7ஆம் தேதி அவரது வீட்டில் இருந்து மர்மகும்பலால் காரில் கடத்திச் செல்லப்பட்டார். பின்னர் அவர் விடுவிக்கப்பட்ட நிலையில், இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் வி.ஜி.கே. மணிகண்டன் மற்றும் சிலர் சேர்ந்து, காதல் திருமணம் செய்து கொண்ட சோனல்குமாரி மற்றும் பாலச்சந்தர் எங்கே இருப்பதாகக் கேட்டு தாக்கியதாக குறிப்பிட்டிருந்தார். இதுதொடர்பாக 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக உள்ள வி.ஜி.கே.மணிகண்டன் மற்றும் அவரது கூட்டாளிகளை வலை வீசி தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்