"மத்திய அரசு தனது புலனாய்வு அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு.." - எதிர்ப்பு தெரிவித்த ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்

x

ராஜஸ்தானில் ஆசிரியர் பணிக்கான தேர்வுத்தாள் கசிந்த வழக்கில், பல இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், மத்திய அரசு தனது புலனாய்வு அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்துவதாக குற்றம் சாட்டினார். இந்நிலையில் ராஜஸ்தான் அரசுக்கு எதிராக ஜெய்ப்பூரில் பாஜக சார்பில் மாபெரும் போராட்டம் நடைபெற்றது. போலீசார் தண்ணீர் பீரங்கிகளையும், தடுப்புகளையும் பயன்படுத்தி போராட்டக்காரர்களை கலைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்