"அனைவரும் ஒற்றுமையாக செயல்பட.." சி.வி.சண்முகம் அதிரடி பேச்சு

x

2024 மக்களவைத் தேர்தலில் புதுச்சேரி உள்ளிட்ட 40 - தொகுதிகளிலும் வெற்றி என்பதையே இலக்காகக் கொண்டு கட்சியினர் செயல்படவேண்டும் என்று என்று அதிமுக விழுப்புரம் மாவட்டச் செயலரும்,மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார்.விழுப்புரத்தில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அவர்,திமுக பணபலம் மற்றும் அதிகார பலத்தை நம்பி மட்டுமே செய்யப்படுகிறது என்றார். ஆனால் அதிமுக தொண்டர்கள் பலத்தை நம்பி செய்ல்படுவதாக கூறினார். அதிமுகவிற்கும், திமுகவுக்கும் 3 சதவித வாக்கு வித்தியாசம் மட்டுமே என்றும், இதை நாம் முறியடிக்க வேண்டும் என்று சி.வி.சண்முகம் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்