10 ரூபாய் நாணயங்களாக கொடுக்கப்பட்ட ஜீவனாம்சம்!

x

சேலம் மாவட்டம் சங்ககிரி நீதிமன்றத்தில் மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்க 2.18 லட்ச ரூபாயை பத்து ரூபாய் நாணயங்களாக 11 பைகளில் கட்டி கணவர் நீதிமன்றத்தில் வழங்கினார்.

சேலம் மாவட்டம் கிடையூர்மேட்டூர் ராஜி - சாந்தி தம்பதியினர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்துள்ளனர். இந்தநிலையில் ராஜீ என்பவர் தனக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டுமென சாந்தி சங்ககிரி குற்றவியல் நீதிமன்றம் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, கணவர் ராஜீ மனைவி சாந்திக்கு மாதா மாதம் 3 ஆயிரம் ஜீவனாம்சம் வழங்க வேண்டுமென உத்தர விட்டார். இந்த உத்தரவின்பேரில் ராஜீ மாதமாதம் 3 ஆயிரம் ஜீவனாம்சம் தொகையை சாந்திக்கு வழங்கி வந்தார். நிலுவையில் உள்ள ஜீவனாம்சம் தொகையையும் வழங்க வேண்டும்மென மீண்டும் என சாந்தி சங்ககிரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில், நிலுவை தொகை 2 லட்சத்து 18 ஆயிரத்தை 10 ரூபாய் நாணயங்களாக மாற்றி பைகளில் வைத்து ராஜீ நீதிமன்றத்தில் ஒப்படைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்