போதையில் மாறிய பாதை..பாதைக்காக போதையில் போராட்டம்..ஒரே துண்டு..ஒட்டுமொத்த பேரும் ஹா..ஹா..

x

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில், அரசுப் பேருந்தின் பின்பக்க படிக்கட்டு உடைந்ததால், பயணிகள் அவதி அடைந்தனர். தென்காசியில் இருந்து திருநெல்வேலி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து, பாவூர்சத்திரத்திரம் வந்த போது, சாலையோரம் இருந்த தடுப்பில் மோதி பின்பக்க படிக்கட்டு உடைந்தது. இதனால், பாவூர்சத்திரம் பேருந்து நிலையத்தில் பயணிகள் அனைவரும் இறக்கி விடப்பட்டனர். நள்ளிரவு நேரத்தில், மாற்று பேருந்து இல்லாததால் நீண்ட நேரம் பயணிகள் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதற்கிடையில், உடைந்த படிக்கட்டை துண்டால் சரி செய்ய முயன்ற மதுப்பிரியரின் செயல் அங்கிருந்தவர்களை நகைப்பில் ஆழ்த்தியது.


Next Story

மேலும் செய்திகள்