புகாரை விசாரிக்க சென்றஎஸ்.ஐ-யை கத்தியால் குத்திய நபர் - சென்னையில் அதிர்ச்சி சம்பவம்

x

சென்னையில் குடும்ப தகராறை விசாரிக்க சென்ற காவல் உதவியாளர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வேளச்சேரியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் வசித்து வருபவர் ஷாலினி. இவர் தனது சகோதரர்கள் தன்னை தாக்கியதாக கூறி போலீசில் புகாரளித்துள்ளார்.

இதன் அடிப்படையில் விசாரிக்க சென்ற காவல் உதவி ஆய்வாளரை, ஷாலினியின் சகோதரர் சதீஷ் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தகவலிறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், காவல் உதவி ஆய்வாளரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதையடுத்து, தப்ப முயன்ற சதீஷை கைது செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்