சென்னையை உலுக்கிய காதல் கொலை... தாய், தந்தை, மகள்... தீராத சோகம்! நிலைகுலைந்த குடும்பம்

x
  • கடந்த வருடம்... அக்டோபர் மாதம்... சென்னை ஆதம்பாக்கம் காவலர் குடியிருப்பில் வசித்து வந்த 20 வயதான கல்லூரி மாணவி சத்தியபிரியா, பரங்கிமலை ரயில் நிலையத்தில், ஓடும் ரயில் முன் சதீஷ் என்ற இளைஞரால் தள்ளிவிடப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.
  • இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்த நிலையில், காதல் விவகாரம் வீட்டிற்கு தெரியவரவே பெற்றோர் கண்டித்ததால், சதீஷை புறக்கணித்துள்ளார் சத்தியப்பிரியா.
  • இதனால் ஆத்திரம் அடைந்த சதீஷ், கடந்த அக்டோபர் 13ம் பரங்கிமலை ரயில் நிலையத்தில், சத்தியபிரியாவை ரயிலின் முன் தள்ளிவிட்டு கொடூரமாக கொலை செய்தார்.
  • மகளின் இறப்பு செய்தி கேட்டு, சத்தியபிரியாவின் தந்தை மாணிக்கம், அன்றைய தினம் இரவே மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
  • ஏற்கெனவே புற்று நோயுடன் போராடி வந்த சத்திய பிரியாவின் தாயார் ராமலெட்சுமியோ, மகளையும் கணவரையும் ஒரே நாளில் இழந்த‌தால் நிலைகுலைந்து போனார்.
  • சென்னை ஆதம்பாக்கம் காவல்நிலையத்தில் குற்றப்பிரிவு காவலராக பணியாற்றி வந்த ராமலெட்சுமியிடம் துக்கம் விசாரிக்க வந்த காவல் ஆணையர் சங்கர் ஜிவால் காலில் விழுந்து அவர் கதறி அழுதது காண்போரை கண்கலங்கை வைத்தது..
  • மகளையும், கணவரையும் இழந்த துக்கத்தில் ராமலெட்சுமி தொடர்ந்து புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
  • மகள் கொலை... தந்தை தற்கொலை... புற்றுநோயால் தாயும் மரணம் என ஒரு குடும்பமே சின்னாபின்னமாகி இருப்பது அனைவரையும் கலங்கச் செய்துள்ளது.
  • மாணவி சத்திய பிரியாவுக்கு இன்னும் 2 சகோதரிகள் உள்ள நிலையில், இருவரையும் சத்திய பிரியாவின் தாய் மாமா அரவணைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்