மதுபோதையில் தகராறு.. விலக்க முயன்ற காவலர் மரணம் - இளைஞர்களின் வெறி செயல்

x

சென்னை, பழவந்தாங்கல் ரயில் நிலையம் அருகே மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட இளைஞர்களை விலக்க முயன்ற போது காவலர் விஜயன் கடுமையாக தாக்கப்பட்டார்.

கற்களை வீசி தாக்கியதில், காவலர் விஜயன் பலத்த காயமடைந்தார். இச்சம்பவத்தில் ஈடுபட்ட அஜித், வினோத், ரவி மற்றும் விவேக் ஆகிய 4 இளைஞர்களை போலீசார் கைது செய்திருந்தனர்.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காவலர் விஜயன், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், தலைமறைவாக உள்ள மணிகண்டனை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்