"பதவிக்காக எதையும் செய்யவார் அஜித்பவார்" - ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி கடும் விமர்சனம்

x

அஜித் பவார் பதவிக்காக எதையும் செய்யக்கூடியவர் என ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி விமர்சித்துள்ளது. மும்பையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் வாரிஸ் பதான், மகாராஷ்ட்ராவில் பா.ஜ.க.வின் பி டீமாக தேசியவாத காங்கிரஸ் மாறியுள்ளதாக தெரிவித்தார். பா.ஜ.க. ஒரு வாஷிங் மெஷின் என்றும், குற்றம்சாட்டப்பட்டவர்கள் கூட்டணியில் சேர்ந்தால், வழக்குகளில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என்றும் குறிப்பிட்டார். தேசியவாத காங்கிரஸ் ஊழல் கட்சி என பிரதமர் மோடி அண்மையில் கூறிய நிலையில், 70 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் என்ன ஆனது என கேள்வி எழுப்பியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்