ஏர் இந்தியா பயணி மீது சிறுநீர் கழித்த விவகாரம் - வருத்தம் தெரிவித்த டாடா சன்ஸ் தலைவர்

x

அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்த ஏர் இந்தியப் பயணி ஒருவர், சக பயணி மீது சிறுநீர் கழித்த சம்பவம் குறித்து, ஏர் இந்தியாவின் உரிமையாளர்களான டாடா சன்ஸ் நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது. ஏர் இந்தியா நிறுவனம் துரிதமாக செயல்பட்டிருக்க வேண்டும் என்று டாடா சன்ஸின் தலைவர் என்.சந்திரசேகர் கூறியுள்ளார். உரிய நடவடிக்கையை, உடனடியாக எடுக்க தவறிவிட்டதற்கு அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். தவறு செய்த அந்த விமானப் பயணியை காவல் துறையினர் பெங்களூரில் கைது செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்