அதிமுக வைத்த கோரிக்கை... "CBSE பாடத்திட்டத்தில் தமிழ் கட்டாயம்.." - முதல்வர் அதிரடி

x

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் தமிழை கட்டாயமாக கொண்டு வர வேண்டும் என அரசு முடிவு செய்துள்ளதாக புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் தமிழ் மொழியையும், மாகியில் மலையாளத்தையும், ஏனாமில் தெலுங்கையும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் கட்டாயமாக்க வேண்டும் என அதிமுக சார்பில் முதல்வர் ரங்கசாமியிடம் மனு அளிக்கப்பட்டது. மேலும், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் தமிழ் மொழியை ஒரு பாடமாக கட்டாயம் கற்க அரசு உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ரங்கசாமி, சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் தமிழை கட்டாயமாக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்