தமிழகத்தில் விலைவாசி அதிகரித்து விட்டதாக அதிமுக எம்.பி தம்பிதுரை புகார்....

x

மாநிலங்களவையில் நடைபெற்று வரும் துணை மாநில கோரிக்கை மீதான விவாதத்தில் அதிமுக எம்.பி. தம்பிதுரை பங்கேற்று பேசினார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி காலத்தில் விலைவாசி உயர்வு கட்டுக்குள் இருந்ததாக கூறினார். தற்போது திமுக ஆட்சியில் விலைவாசி அதிகரித்துள்ளது என அவர் புகார் கூறினார். மின் கட்டணம் அதிக அளவு இரு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது என்றும் அதிமுக எம்.பி.தம்பிதுரை குற்றம் சாட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்