அதிமுக பொதுச்செயலாளர் விவகாரம்... ஈபிஎஸ்-க்கு எகிறும் டென்ஷன்..! - சசிகலா வழக்கில் நீதிமன்றம் உத்தரவு

x

சொத்து வழக்கில் சசிகலா சிறை சென்ற பிறகு, 2017ல் கூடிய அதிமுக பொதுக்குழுவில் சசிகலா, தினகரனை நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து தன்னை நீக்கியதை எதிர்த்து சசிகலா சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கு தாக்கல் செய்ய சசிகலாவுக்கு அடிப்படை முகாந்திரம் இல்லை எனக் கூறி மனுவை நிராகரித்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து, சசிகலா தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

நீண்டகாலமாக நிலுவையில் உள்ள இந்த வழக்கை விசாரணைக்கு பட்டியலிடக் கோரி சசிகலா தரப்பில், நீதிபதி தமிழ்செல்வி முன்பு முறையீடு செய்யப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கை வரும் 23ஆம் பட்டியலிட உத்தரவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்