"ஈபிஎஸ்-க்கு தடை"ஓபிஎஸ்-ன் மாஸ்டர் பிளான் செயல்படுமா..?

x
    • அதிமுக பொதுச்செயலாளராக செயல்பட எடப்பாடி பழனிசாமிக்கு தடை விதிக்குமாறு ஓ.பி.எஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு, சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது .
  • கடந்த ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கும், பொதுச் செயலாளர் தேர்தலுக்கும் தடை விதிக்கக் கோரி, ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜெ.சி.டி.பிரபாகர் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
  • இந்த தீர்ப்பை எதிர்த்து, ஓ.பி.எஸ் தரப்பினர் மேல் முறையீடு செய்துள்ளனர்.
  • இந்த மனு, நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வருகிறது.
  • இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை, அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்பட தடை விதிக்குமாறு மேல் முறையீட்டு மனுவில் ஓபிஎஸ் தரப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்