களவாடப்பட்ட அதிமுகவின் ஆவணங்கள் நீதிமன்றம் மூலம் முன்னாள் அமைச்சரிடம் ஒப்படைப்பு

x

கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தின் கதவை உடைத்து , அலுவலகத்தினுள் நுழைந்து ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் எடுத்துச் சென்றார். இந்த ஆவணங்கள், சென்னை சைதாப்பேட்டை பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில், நீதிபதி சந்தோஷ் முன்னிலையில் சிபிசிஐடி காவலர்கள் மூலம் அதிமுகவினரிடம் ஒப்படைக்கப்பட்டன .முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் ஆவணங்கள் மற்றும் பொருள்களை கையெழுத்திட்டு பெற்றுக் கொண்டார். நீதிமன்றத்திலிருந்து பெறப்பட்ட அனைத்து ஆவணங்களையும், கார் மூலம் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு எடுத்து சென்றனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சி.வி.சண்முகம், ஒப்படைக்கப்பட்ட பொருள்களில் ரொக்கப்பணம் ஏதும் இல்லை என்றும், ஓ. பன்னீர்செல்வம் தரப்பினர் பணம் ஏதும் எடுத்து சென்றனரா என்பது வழக்கு விசாரணையில் தெரியவரும் என்று கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்