10 ,12 -ம் வகுப்பு படித்து விட்டு மருத்துவம்..அடுத்தடுத்து சிக்கும் போலி டாக்டர்கள் -போலீசார் அதிரடி

x
  • திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுற்றுவட்டார பகுதியில் மருத்துவம் பார்த்து வந்த 5 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
  • போலி மருத்துவர்கள் தொடர்பாக மாவட்ட எஸ்.பி. உத்தரவிரன் போரில் மருத்துவ குழுவினர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
  • இதில், 12 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு, கே.ஜி.கண்டிகையில் உள்ள ரத்த பரிசோதனை மையத்தில் மருத்துவம் பார்த்து வந்த ராபர்ட் என்பவரை கைது செய்தனர்.
  • இதேபோல், செங்கட்டானூர் கிராமத்தில் மருத்துவமனை வைத்து மருத்துவம் பார்த்து வந்த ஞானபிரகாஷ், திருவாலங்காடு பகுதியில் வீட்டில் மருத்துவம் பார்த்து வந்த ரெஜினா ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.
  • மேலும், பிளஸ் 2 படித்த பள்ளிப்பட்டை சேர்ந்த மோகன், பத்தாம் வகுப்பு மட்டுமே படித்து விட்டு மருத்துவம் பார்த்து வந்த பெருமாநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த வடிவேல் என்பவரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்