முல்லை பூவை முகர்ந்து பார்த்து அமைச்சர் போட்ட ஆர்டர் | Cuddalore

x

கடலூர் மாவட்டம் கீழ்அனுவம்பட்டு பகுதியில், முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், சாலைகளை மேம்படுத்தும் பணியை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தொடங்கி வைத்தார். முன்னதாக, அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வத்துக்கு சிவாச்சாரியார் முல்லை பூ கொடுத்தார். அதை முகர்ந்து பார்த்த அமைச்சர், பின்னர் காரில் வைக்க சொன்ன சுவாரசிய சம்பவம் நடைபெற்றது. தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாகவே, கடலூர் மாவட்டத்தில் 130 கோடி ரூபாய் செலவில் சாலைகள் அமைக்கும் பணி முடிக்கப்படும் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்