அண்ணனை கல்லால் தாக்கிய பாசக்கார தம்பி.. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை

x

ஏற்காடு, கொம்மக்காடு பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி விவேக். இவருக்கு 5 வருடங்களுக்கு முன் வெண்ணிலா என்ற பெண்ணுடன் திருமணமானது. வெண்ணிலாவுக்கும், விவேக்கின் அண்ணனான வினோத் என்பவருக்கும் இடையே திருமணம் தாண்டிய உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து, தம்பி அண்ணனிடம் பல முறை எச்சரித்த நிலையிலும் இது தொடர்ந்துள்ளது. இந்நிலையில் தம்பி விவேக், அண்ணனை கல்லால் கடுமையாக தாக்கியுள்ளார். பின்னர் காட்டெருமை தாக்கிவிட்டதாக கூறி மருத்துவமனையிலும் அனுமதித்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரிக்கையில் உண்மை வெளிப்படவே, தம்பி விவேக் மீது கொலை முயற்சி வழக்கு பதியப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்