அம்மாவுடன் தகாத உறவு..தலையை துண்டாக்கிய அப்பா மகன்..ராஜபாளையம் அருகே பயங்கரம்

x

ராஜபாளையம் அருகே சுந்தரராஜபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கனகராஜ். இவரது மனைவி ரமேஷ்குமாரியுடன், அதே பகுதியை சேர்ந்த அன்பழகன் என்பவர் கடந்த 2 வருடமாக தகாத உறவில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த, கனகராஜ் பலமுறை இருவரை கண்டித்தும், தொடர்ந்து தகாத ஊறவில் இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால், குடும்பத்தில் தகராறு ஏற்பட்ட நிலையில், ரமேஷ்குமாரி அவருடைய தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், சம்பவத்தன்று கனகராஜின் வீட்டிற்கு அருகேயுள்ள தன்னுடைய உறவினரின் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த அன்பழகனை, தனது மகனுடன் சேர்ந்து கனராஜ் அரிவாளால் வெட்டி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கனகராஜ் மற்றும் அவரது மகனை கைது செய்த நிலையில், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்