போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதி

x

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் குடல் அறுவை சிகிச்சைக்காக வாடிகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கடந்த சில நாட்களாக ஹெர்னியா பாதிப்பால் போப் பிரான்சிஸ் அவதிப்பட்டு வந்ததாக கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து மருத்துவர்களின் தீவிர பரிசோதனை மற்றும் ஆய்விற்கு பிறகு, அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. பின்னர், சிகிச்சைக்காக, ரோமில் உள்ள ஜெமிலி பல்கலை.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அறுவை சிகிச்சைக்கு பிறகு, நீண்ட நாள் மருத்துவமனையில் போப் பிரான்சிஸ் தங்கியிருப்பார் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்