மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு... "பிப். 15 வரை காலக்கெடு ..." - அமைச்சர் செந்தில் பாலாஜி

x

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு பிப்ரவரி 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 78 நாட்களில் 2 கோடியே 42 லட்சம் பேர் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளதாகவும் கூறினார்.

ஒரு மின் இணைப்புடன் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆதரை இணைத்து கொள்ளும் வசதிகள் உருவாக்கப்பட்டு அதை கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்