ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் மழைநீர் புகுந்ததால் தற்காலிகமாக இடமாற்றம்

x

ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் மழைநீர் புகுந்ததால் தற்காலிகமாக வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் பெய்த வடகிழக்கு பருவமழையால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் மழைநீர் சூழ்ந்தது. ஆதம்பாக்கம் காவல் நிலையம் சாலையின் உயரத்தை விட 3 அடி பள்ளமாக இருப்பதால், மழை நீரானது காவல் நிலையத்திற்குள் புகுந்தது. தேங்கிய மழை நீரை மோட்டார் வைத்தும், ஆட்களை வைத்தும் வெளியேற்றப்பட்டு வருகிறது. இங்கு தொடர்ந்து காவல் நிலையம் செயல்பட முடியாததால், காவல் நிலையம் தற்காலிகமாக அம்பேத்கர் நகர் 20வது தெருவிற்கு மாற்றப்பட்டுள்ளதாக ஆதம்பாக்கம் போலீசார் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்